கோவில்கள்
அருள்மிகு இலஞ்சிக் குமாரர் திருக்கோவில்
இந்த கோவிலில் அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சுவாமி : குமாரர் சுவாமி
தீர்த்தம் : சித்ராநதி
தலவிருட்சம் : மகிழம்
தலச்சிறப்பு : அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு : இமயமலையில் அம்மை அப்பனின் திருமணத்தைக் காண அனைத்தப் பகுதியில் உள்ளவர்களும் வடதிசையில் வந்து குவிந்ததால், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதை சரி செய்ய சிவபெருமான் அகத்திய மாமுனிவரை தென்திசை செல்ல பணித்தார். இறைவனின் கட்டளையை சிரமேற்கொண்டு தென்திசை புறப்பட, அகத்தியர் பொதிகை மலையின் குற்றாலத்திற்கு வந்தார் . அப்போது குற்றாலத்தில் உள்ள திருக்கோயில் வைணவ திருக்கோயிலாக இருந்ததால் வைணவர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.
எனவே அவர் சித்ரா நதி தீர்த்தத்ற்கு வந்து வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். வெண்மணலுக்கு “தேவாகைரியில் இருவானுகம்” என்ற பெயர் இருந்ததால் அதற்கு “இருவாலுக ஈசர்” என்ற பெயர் ஏற்பட்டது. வந்த வேலை முடிய வேண்டுமே, இன்னும் முடியவில்லையே என எண்ணிய, அகத்தியர் முருகபெருமானை வேண்டினார். முருகபெருமானும் அகத்தியர் முன்னே தோன்றி, “வைணவ வேடத்திலேயே குற்றாலம் செல். அங்கு சென்று அங்குள்ள திருமாலை குறுக்கி குற்றாலநாதராக்கு” என பணித்தார். அகத்தியரும் அவ்வாறே செய்து தான் வந்த பணியை முடித்தார்.
நடைதிறப்பு :
காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
பூஜை விவரம் :
தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. திருவனந்தல், விளாபூசை, காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த சாமம் ஆகிய ஆறு கால பூசைகள் தினமும் நடைபெறுகிறது.
திருவிழாக்கள் :
சித்திரை பிரமோத்ஸவம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி தனுர்பூஜை தைபூசம், மாசி மகம் ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
கோயில் முகவரி :
அருள்மிகு திருஇலஞ்சிக்குமாரர் திருக்கோயில்,
இலஞ்சி -627805,
திருநெல்வேலி மாவட்டம்.
தீர்த்தம் : சித்ராநதி
தலவிருட்சம் : மகிழம்
தலச்சிறப்பு : அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு : இமயமலையில் அம்மை அப்பனின் திருமணத்தைக் காண அனைத்தப் பகுதியில் உள்ளவர்களும் வடதிசையில் வந்து குவிந்ததால், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதை சரி செய்ய சிவபெருமான் அகத்திய மாமுனிவரை தென்திசை செல்ல பணித்தார். இறைவனின் கட்டளையை சிரமேற்கொண்டு தென்திசை புறப்பட, அகத்தியர் பொதிகை மலையின் குற்றாலத்திற்கு வந்தார் . அப்போது குற்றாலத்தில் உள்ள திருக்கோயில் வைணவ திருக்கோயிலாக இருந்ததால் வைணவர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.
எனவே அவர் சித்ரா நதி தீர்த்தத்ற்கு வந்து வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். வெண்மணலுக்கு “தேவாகைரியில் இருவானுகம்” என்ற பெயர் இருந்ததால் அதற்கு “இருவாலுக ஈசர்” என்ற பெயர் ஏற்பட்டது. வந்த வேலை முடிய வேண்டுமே, இன்னும் முடியவில்லையே என எண்ணிய, அகத்தியர் முருகபெருமானை வேண்டினார். முருகபெருமானும் அகத்தியர் முன்னே தோன்றி, “வைணவ வேடத்திலேயே குற்றாலம் செல். அங்கு சென்று அங்குள்ள திருமாலை குறுக்கி குற்றாலநாதராக்கு” என பணித்தார். அகத்தியரும் அவ்வாறே செய்து தான் வந்த பணியை முடித்தார்.
நடைதிறப்பு :
காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
பூஜை விவரம் :
தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. திருவனந்தல், விளாபூசை, காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த சாமம் ஆகிய ஆறு கால பூசைகள் தினமும் நடைபெறுகிறது.
திருவிழாக்கள் :
சித்திரை பிரமோத்ஸவம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி தனுர்பூஜை தைபூசம், மாசி மகம் ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
கோயில் முகவரி :
அருள்மிகு திருஇலஞ்சிக்குமாரர் திருக்கோயில்,
இலஞ்சி -627805,
திருநெல்வேலி மாவட்டம்.