ஆன்மிகம்
பவானி அம்மன்

புளியங்குடி ஓம் ஸ்ரீ முப்பெரும்தேவியர் பவானி அம்மன் ஆலயம்

Published On 2020-02-11 01:36 GMT   |   Update On 2020-02-11 01:36 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்வாக்கிற்கு பெயர் பெற்ற கடையநல்லூர் தாலுகா, புளியங்குடி நகரில் அரசு மத்துவமனை அருகில் கோபுரநகரில் அமைந்துள்ளது முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம்.
ஆலயங்கள் இறைவனின் அளவிலா அருட்சிறத்தை எடுத்துணர்த்தும் புனிதத் தலங்கள் மனிதர்களின் ஆத்ம சக்தியை உணரவைத்து அவனுள்ளே அவனையே உணர வைக்கும் சக்திப் பீடங்கள். உலகமே சக்தி மயமானது என்பதை மனிதர்களுக்கு உணர்த்தும் ஆன்மீக சொருபங்கள். இத்தகைய அருட்திறம் வாய்ந்த ஆலயங்களில் ஒன்று தான் திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்வாக்கிற்கு பெயர் பெற்ற கடையநல்லூர் தாலுகா, புளியங்குடி நகரில் அரசு மத்துவமனை அருகில் கோபுரநகரில் அமைந்துள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம்.

கோவில் உருவாக காரணம்

சுமார் பத்து வருடங்களுக்கு முன் சாதாரண ஒரு மொட்டை மாடியில் உள்ள ஒரு சிறு அறையையே கோவிலாக கொண்டு இத்தேவியர் தங்களை நாடி வரும் பக்தர்களின் கண்கண்ட தெய்வமாக விளங்கினர். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புற்றுக்கோவில் இருந்து பக்தர்கள் வழிபட்டு வந்தனர். அதனால் அந்த இடம் வாங்கப்பட்டு, சென்னை பெரியபாளையத்தில் இருந்து பிடிமண்கொண்டு வரப்பட்டு, ஒரு நன்நாளில் பூமிபூஜை போட்டு கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டது.

ஆடி மாத சிறப்புகள்

ஆடி மாதம் வரும் பூரம் திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நாளில் அம்மாக்களிடம் குழந்தை வரம் வேண்டி வரும் கன்னியர்களுக்கும், நீண்ட நாள் குழந்தை வரம் இல்லாதவர்களுக்கும், குழந்தை பாக்கியம் பெற்றவர்களுக்கும் இக்கோவிலில் வளையல் வளைகாப்பும், 21 வகையான சாதங்களும், பிரசாதமாக வழங்கப்படும். இந்த அருட்பிரசாதத்தை பெற்றவர்களுக்கு குழந்தைச் செல்வம் கட்டாயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அருள்வாக்கு

ஒவ்வொரு ஐப்பசி மாதமும் முதல் வெள்ளிக்கிழமையன்று பெரும்பூஜை என்னும் சிறப்புப் பூஜை நடைபெறுகிறது. சக்தியம்மாளின் உடம்பிற்குள் ஸ்ரீ பெரிய பாளையத்து பவானி அம்மன் குடி கொண்ட நாளையே பெரும்பூஜையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அம்மாக்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும் காலை 8 மணி முதல் குருநாதர் சக்தியம்மா சேலை அணிந்து முழு பெண் உருவத்தில் ஒரு கையில் தீச்சட்டியுடன் மகாசக்தி வாய்ந்த பவானி அம்மாவாக பக்தர்களுக்கு தலையில் கை வைத்து சொல்லும் அருள்வாக்கு என்னும் சிறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இப்பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்படும் பவானி அம்மன் அருள்வாக்கு 100 சதவீதம் பலித்து வருகிறது. பவானி அம்மாவாக அருள் வாக்கு தரும் சக்தியம்மாவே அனைத்து மக்களுக்கும் ஆன்மீகம் போதிக்கும் குருவாக விளங்குகிறார்.

இக்கோவிலில் கொடுக்கப்படும் மஞ்சள் காப்பு பிரசாதத்தை ‘ஜெய்பவானி’ என்று சொல்லி நெற்றியில் பூசிக் கொண்டால் அனைத்து செயல்களும் நன்மையாக நடக்கும்.
Tags:    

Similar News