ஆன்மிகம்
திருநாங்கூர் நாராயண பெருமாள் கோவில்

திருநாங்கூர் நாராயண பெருமாள் கோவில்

Published On 2019-10-21 01:39 GMT   |   Update On 2019-10-21 01:39 GMT
நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
திருமங்கையாழ் வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரில் அமைந் துள்ளது. அழகு மிக்க உப் பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்து இங்கு இறைவன் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தால் திருமணிமாடக் கோவில் எனப்பெயர் வந்ததாகக் கூறுவர். பத்ரிகாஆரமத்தில் இருக்கும் நாராயணனே அதேபோன்ற அமர்ந்த கோலத்தில் இருப்பதாக நம்பிக்கையாகும்.

‘நந்தா விளக்கே, அளத்தற் கரியாய்’ என்று ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஸ்ரீமந் நாராயணனை விளக்கே என்று அழைக்கிறார். ஒருவராலும் தூண்டப் படாமல் தானாகவே ஒளியுடன் திகழும் தூண்டா விளக்காகும். அதாவது நித்யமான ‘ஸ்வயம் பிரகாச மான ஞானத்தை உடையவன்’ என்பது பொருள்.
அழகிய உப்பரிகை களுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்து இங்கு எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தால் திருமணி மாடக்கோவில் எனப்பெயர் வந்ததாகவும் கூறுவர்.

சீர்காழிக்கு அருகில் உள்ள திருமணி மாடக்கோவில் என்னும் வைணவத் திருப்பதியில், நாராயணன் வீற்றிருக்கும் கோலத்தில் தரிசனம் தருகிறார். இந்த கோவில் கோபுரத்தில் மூன்று துளைகள் இருக்கின்றன. அதன் வழியே வருடத்தின் 365 நாட்களும் தன் கிரணங்களால் பெருமாளை பூஜிக் கிறான் ஆதவன்.
11 பெருமான்கள்

நாங்கூர் - வடமொழியில் நாகபுரி என வழங்கும். ஆண்டுதோறும் தை அமாவாசையன்று நாங் கூரைச் சேர்ந்த பதினொரு திருக்கோவில் எம்பெரு மான்களும் தங்கக் கருட வாகனங்கள் மீது காலையில் எழுந்தருளி மாலை வரையிலும் இத்தலத்தில் தங்குவார்கள். இதற்கென இக்கோவிலில் வரிசையாகத் தனித்தனி மண்டபங்கள் உள்ளன. எல்லோரும் இரவில் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றார்கள். திருமங்கையாழ்வார் அன்னவாகனத்தின் மீது எழுந்தருளுவார்.
ஆண்டு முழுவதும் பதினொரு தங்கக் கருட வாகனங்க ளும் பாது காப்பாக இக்கோயிலில் வைக்கப் பெற்றுள்ளன.

மூலவர் : - நாராயணன், நந்தாவிளக்கு கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தாயார்: - புண்டரீகவல்லித் தாயார்
உற்சவர் : அளத்தற் கரியான்
தீர்த்தம்: இந்திர புஷ்கரணி, ருத்ர புஷ்கரணி

பத்ரிகாச்ரமத்தில் இருக்கும் ஸ்ரீமந் நாராயணனே இங்கு 11 திருமால்களில் ஒருவராக வந்து நின்றார். பத்ரியிலும் நாராயணன் என்ற பெயரிலேயே அமர்ந்த திருக்கோலம், இங்கும் அதே நிலையில் உள்ளார்.

பத்ரிகாஸ்ரமத்தில் தான் ஸ்ரீமந்நாராயணன் திருமந்திரத்தை உபதேசித்து அருளினார். எனவே தான் எமக்கும் அந்த மந்திரத்தை அருள வேண்டுமென தேவர்கள் இங்கு வந்து வேண்டுகின்றனர் என்பது ஐதீகம். திருமந்திரம் உபதேசித்த பெருமாளே இங்கு எழுந்தருளியிருப்பதால் இது பத்ரிக்குச் சமமான ஸ்தலம்.

எம்பெருமான், சிவனின் நடனத்தை நிறுத்த, திருநாங்கூரில் பிரவேசித்த போது இந்த தலம் அருகில் சிவன் நடனம் புரிந்துகொண்டு இருந்த தாகவும், ஸ்ரீமந் நாராயணனைப் பரமபத நாதனாகக் கண்ட பரமேஸ்வரன் தன்னைப்போல் 11 உருக் கொண்டு பெருமாள் காட்சி தர வேண்டுமென விண்ணப்பம் செய்ய, அவ்விதமே எம்பெருமான் 11 திருக்கோலங்களில் காட்சி தந்து ஒரு சிவனை அழைத்து ஒரு சிவனுக்குள் செலுத்தி பிறகு இன்னொரு சிவனை அழைத்துச் செலுத்தி இந்த விதமாக 11 சிவன்களை ஒன்றாக்கி நிறுத்தினார் என்பது ஐதீகம்.

இந்த மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாளே பத்து திருமேனிகளை எடுத்துக் கொண்டு தாம் ஒரு திருமேனியாக வந்ததாகவும் கூறுவர். திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவின் போது 11 எம்பெருமான்களும் இங்கு எழுந்தருள சீர்காழியை சுற்றியுள்ள இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து பெருமானை தரிசனம் செய்வர். தற்போது இந்த விழா மிகவும் பிரசித்து பெற்று விட்டதால் தமிழகமெங்கும் உள்ள பக்தர்கள் கருட சேவை வைபவதத்தில் கலந்து கொள்கிறார்கள்.

திருமங்கை யாழ்வார் ஒவ்வொரு பெருமானையும் வலம்வந்து (மாலை மரியாதைகளுடன்) மங்களாசாசனம் செய்யும் காட்சி தை அமாவாசைக்கு மறுநாள் இங்கு நடப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். திருமங்கை யாழ்வார் ஒவ்வொரு பெருமாளாக மங்களா சாசனம் செய்துவரும்போது அப்பெருமாளுக்கு உரிய பாசுரங்களை பக்தர்களுடன் சேர்ந்து பாடல் சேவிப்பது செவிக்கினிய விருந்தாகும்.

திருக்கோட்டியூர் நம்பி இங்கு விஜயம் செய்துள்ளார். திருமந்திரத்தை உபதேசித்த பத்ரி நாராயணன் இருக்கும் இடம். திருமந்திரத்தை ராமானுஜருக்கு உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பி இங்கு எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் விசேஷமாகும். மிகவும் சிறந்த வடிவமைப்புடன் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.
திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

 இயற்கையெழில் கொஞ்ச செந்நெல் வயல்கள் சூழ, நிறைந்த பொழில்களில் மந்தாரம் நின்றிலங்க மிகவும் ரம்மியமாகத் திகழும் இப்பகுதியில் (திருநாங்கூர் பகுதி) இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவை களின் வருகையும் வாழ்வும் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பழனம் என்று சொல்லத் தக்க அளவில் அமைந்துள்ள இப்பகுதியில் பைங்காற் கொக்கும், செங்கால் அன்னமும், குயிலும், மயிலும், கிளியும், புறாவும் தம் துணையோடு பறந்து ஒன்றித் திளைத்து விளையாடி மகிழும் காட்சிகள் திருமங்கை யாழ்வாரின் பாடல்களிலும் பயின்று வந்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் ஆண்டு தோறும் இந்த பெரு மாள்களை மங்களா சாசனம் செய்ய, திருமங்கையாழ்வார் இங்கு வருவதாக பக்தர்களின் நம்பிக்கை.

திருநாங்கூர் சுற்றி உள்ள வயல் வெளிகளில் கருட சேவைக்கு (முதல் நாள் நள்ளிரவில்) காற்றி னால் நெற்பயிர்கள் சல..சல.. என்று அசைய அந்த சத்தத்தைக் கேட்ட உடன் திருமங்கை யாழ்வார் பிர வேசித்து விட்டதாக பக்தர்கள் கூத்தாடு வதும், திருமங்கையாழ்வாரால் மிதிக்கப்பட்ட வயல் வெளிகளில் மிகுந்த நெல் விளை யும் என்பதும் இப்பகுதியில் நிலவும் நம்பிக்கையாகும்.
Tags:    

Similar News