ஆன்மிகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்

இந்த வார விசேஷங்கள் 17.3.2020 முதல் 23.3.2020 வரை

Published On 2020-03-17 03:16 GMT   |   Update On 2020-03-17 03:16 GMT
மார்ச் 17-ம் தேதியில் இருந்து மார்ச் 23-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
17-ந்தேதி (செவ்வாய்) :

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளி திருப்பல்லக்கிலும், சுவாமி- தாயாருடன் வெள்ளி யானை வாகனத்திலும் பவனி.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, கோவர்த்தனகிரிபந்தலடி சென்று திரும்புதல், கண்ணன் அலங்காரக் காட்சி.
* திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் காலை அன்ன வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.

18-ந்தேதி (புதன்) :

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி பஞ்சமுக அனுமன் வாகனத்தில், ராமர் திருக்கோலமாய் காட்சியருளல்.
* திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் திருவீதி உலா.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் இரவு புன்னை மர அலங்கார படிச்சட்டத்தில் பவனி.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி- அம்பாள் இருவருக்கும் திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.

19-ந்தேதி (வியாழன்) :

* திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் வடலூர் சப்பரத்திலும், இரவு தங்கக் குதிரை வாகனத்திலும் வீதி உலா.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, கண்ட பேரண்ட பட்சிராஜன் அலங்காரமாய் காட்சி தருதல்.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கில் பவனி, வெண்ணெய் தாழி சேவை, இரவு சுவாமி வெள்ளிக் குதிரையிலும், தாயார் அலங்கார * படி சட்டத்திலுமாக ஆற்றங்கரையில் வேடர்பறி உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.

20-ந்தேதி (வெள்ளி) :


* சர்வ ஏகாதசி.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை பல்லக்கில் பவனி, இரவு ராஜாங்க அலங்காரம், புஷ்பப் பல்லக்கில் பவனி.
* திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் கோவிலில் ரத உற்சவம்.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள், தேசிகரோடு திருத்தேருக்கு எழுந்தருளல், இரவு மூலவருக்கு புஷ்பாங்கி சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

21-ந்தேதி (சனி) :


* சனிப் பிரதோஷம்.
* திருநெல்வேலி டவுண் கரிய மாணிக்கப் பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
* உப்பலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சப்தாவரணம், சுவாமி- அம்பாள் புறப்பாடு.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி ரிஷி முக பர்வதம், பட்டாபிஷேக திருக்கோலமாய் காட்சி தருதல்.
* திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் தீர்த்தவாரி.
* மேல்நோக்கு நாள்.

22-ந்தேதி (ஞாயிறு) :

* முகூர்த்த நாள்.
* மாத சிவராத்திரி.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராஜ அலங்காரம்.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்சவம், இரவு சுவாமி- தாயார் புஷ்பக விமானத்தில் பவனி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில், அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

23-ந்தேதி (திங்கள்) :

* அமாவாசை.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி தங்க சூரியப் பிரபையில் பவனி, வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சி அருளல்.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்சவம், மாலை புஷ்ப யாகம், இரவு சுவாமி- தாயார் அலங்காரப் படிச் சட்டத்தில் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
Tags:    

Similar News