ஆன்மிகம்
சிவபெருமான் குடும்பம்

இந்த வார விசேஷங்கள்- பிப்ரவரி 25-ம் தேதியிலிருந்து மார்ச் 2-ம் தேதி வரை

Published On 2020-02-25 03:07 GMT   |   Update On 2020-02-25 03:07 GMT
பிப்ரவரி 25-ம் தேதியில் இருந்து மார்ச் 2-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
25-ந்தேதி (செவ்வாய்) :

* கோயம்புத்தூர் கோணியம்மன், நத்தம் மாரியம்மன் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
* காளஹஸ்தி, திருவைகாவூர், ஸ்ரீசைலம், திருகோகர்ணம் ஆகிய தலங்களில் சிவபெருமான் மலை வலம் வருதல்.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.

26-ந்தேதி (புதன்) :

* முகூர்த்த நாள்.
* சாம்பல் புதன்.
* திருநெல்வேலி டவுண் மேலரத வீதி பரமேஸ்வரி அம்மன் கோவில் வருசாபிஷேகம்.
* நத்தம் மாரியம்மன் பவனி வருதல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.

27-ந்தேதி (வியாழன்) :

* சதுர்த்தி விரதம்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் கிளி வாகனத்தில் திருவீதி உலா.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து, வைரவேல் தரிசனம்.
* திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சமநோக்கு நாள்.

28-ந்தேதி (வெள்ளி) :

* மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் மாசி உற்சவம் ஆரம்பம்.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் தொடக்கம், சூரிய பிரபையில் சுவாமி பவனி.
* நத்தம் மாரியம்மன் கோவிலில் பால் காவடி உற்சவம், இரவு மின்விளக்கு அலங்கார தங்க ரதத்தில் அம்பாள் வீதி உலா.
* திருப்போரூர், வள்ளிமலை ஆகிய தலங்களில் முருகப்பெருமானுக்கு உற்சவம் ஆரம்பம்.
* சமநோக்கு நாள்.

29-ந்தேதி (சனி) :

* சஷ்டி விரதம்.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவிலில் உற்சவம் ஆரம்பம், தோளுக்கினியானில் சுவாமி பவனி.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் திருவீதி உலா.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்கக் கேடய வாகனத்திலும், அம்பாள் சிறிய சப்பரத்திலும் புறப்பாடு.
* பெருவயல் முருகப்பெருமான் கிடா வாகனத்தில் பவனி.
* மதுரை இம்மையில் நன்மை தருவார் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.

1-ந்தேதி (ஞாயிறு) :

* கார்த்திகை விரதம்.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், மரத் தோளுக்கினியானில் பவனி.
* காங்கேயநல்லூர் முருகப் பெருமான் பூத வாகனத்தில் புறப்பாடு.
* திருப்போரூர் முருகப்பெருமான் பிரணவ மந்திரம் உபதேசித்து அருளிய லீலை.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவிலில் உற்சவம் தொடக்கம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பூங்கோவில் சப்பரத்திலும், அம்பாள் கேடயத்திலும் பவனி. இரவு சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்தில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

2-ந்தேதி (திங்கள்) :

* காங்கேயநல்லூர் முருகப் பெருமான் சேஷ வாகனத்தில் பவனி.
* கோயம்புத்தூர் கோணியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு.
* காரமடை அரங்கநாதர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* நத்தம் மாரியம்மன் பவனி வருதல்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா.
* மேல்நோக்கு நாள்.
Tags:    

Similar News