ஆன்மிகம்
கிறிஸ்துமஸ் பண்டிகை

இந்த வார விசேஷங்கள் 24.12.2019 முதல் 30.12.2019 வரை

Published On 2019-12-24 02:47 GMT   |   Update On 2019-12-24 02:47 GMT
டிசம்பர் 24-ம் தேதியில் இருந்து டிசம்பர் 30-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
24-ந்தேதி (செவ்வாய்) :

* மாத சிவராத்திரி.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

25-ந்தேதி (புதன்) :

* கிறிஸ்துமஸ் பண்டிகை.
* அமாவாசை.
* அனுமன் ஜெயந்தி.
* நாமக்கல், சுசீந்திரம் ஆலயங்களில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனை.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
* ஏரல் அருணாச்சல சுவாமிகள் திருவிழா.
* சமநோக்கு நாள்.

26-ந்தேதி (வியாழன்) :

* மதுரை கூடலழகர் சன்னிதியில் பெரியாழ்வார் வென்ற கிளி விலாசம் எழுந்தருளி, பரத்துவ நிர்ணயம் செய்தருளல். கருடோற்சவம்.
* திருவரங்கம் நம்பெருமாள், திருநெடுதாண்டகம், பெருஞ்சேரி வாகீஸ்வரர் கோவில்களில் சுவாமி பவனி.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.

27-ந்தேதி (வெள்ளி) :

* சகல விஷ்ணு ஆலயங்களிலும் திருப்பல்லாண்டு உற்சவம் ஆரம்பம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் வேதபிரான்பட்டர் திரு மாளிகை பச்சை பரப்பி, கடாசித்து பெரிய பெருமாள், கருடன் பட்டர் பிரான் திருப்பல்லாண்டு தொடக்கம்.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்

28-ந்தேதி (சனி) :

* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.
* திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மனுக்கு திருமஞ்சன சேவை.
* திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சனீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனை.
* மேல்நோக்கு நாள்.

29-ந்தேதி (ஞாயிறு) :

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், காலிங்க நர்த்தன திருக்கோலக் காட்சி.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் சேர்த்தியில் வேணுகான கண்ணன் திருக்கோலமாய், பல்லக்கில் கன்றால் விளா எறிந்த திருக்கோலக் காட்சி.
* மதுரை கூடலழகா், திருமோகூர் காளமேகப் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆகிய தலங்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.
* மேல்நோக்கு நாள்.

30-ந் தேதி (திங்கள்) :

* சதுர்த்தி விரதம்.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், ஆண்டாள் திருக்கோலமாய் பல்லக்கில் வீணை மோகினி அலங்காரம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் -ரெங்கமன்னார், திருவரங்கம் நம் பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கோதண்ட ராமர் திருக்கோலமாய் காட்சி தருதல்.
* மேல்நோக்கு நாள்.
Tags:    

Similar News