ஆன்மிகம்
துர்க்கை

இந்த வார விசேஷங்கள் 24.9.2019 முதல் 30.9.2019 வரை

Published On 2019-09-24 03:15 GMT   |   Update On 2019-09-24 03:15 GMT
செப்டம்பர் 24-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 30-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
24-ந் தேதி (செவ்வாய்) :

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு கண்டருளல்.
* மேல்நோக்கு நாள்.

25-ந்தேதி (புதன்)

* சர்வ ஏகாதசி.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள்.

26-ந்தேதி (வியாழன்) :


* பிரதோஷம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சகல சிவன் கோவில்களிலும் இன்று மாலை நந்தீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.

27-ந்தேதி (வெள்ளி) :

* மகாளய கேதார விரதம்.
* மாத சிவராத்திரி.
* திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள்.

28-ந்தேதி (சனி) :

* மகாளய அமாவாசை.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.
* திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தல்.
* மேல்நோக்கு நாள்.

29-ந்தேதி (ஞாயிறு) :

* நவராத்திரி ஆரம்பம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு லட்சார்ச்சனை ஆரம்பம்.
* சகல சிவன் கோவில்களிலும் நவராத்திரி தொடக்கம்.
* மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு தர்பார் காட்சி.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், அருப்புக்கோட்டை சவுடாம்பிகை, கழுகுமலை முருகன், மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி, தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், மைசூர் சாமுண்டீஸ்வரி ஆகிய தலங்களில் நவராத்திரி ஆரம்பம்.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்காரக் காட்சி.
* சமநோக்கு நாள்.

30-ந்தேதி (திங்கள்) :

* திருப்பதி ஏழுமலையான், தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், நாட்டரசன்கோட்டை எம்பெருமாள், குணசீலம் பெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார தரிசனம்.
* சமநோக்கு நாள்.
Tags:    

Similar News