ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் 18.12.2018 முதல் 24.12.2018 வரை

Published On 2018-12-18 03:24 GMT   |   Update On 2018-12-18 03:24 GMT
டிசம்பர் மாதம் 18-ம் தேதியில் இருந்து 24-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
18-ந்தேதி (செவ்வாய்) :

* வைகுண்ட ஏகாதசி.
* சகல விஷ்ணு ஆலயங்களிலும் இராபத்து உற்சவம்.
* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவ காட்சி, இரவு வெள்ளி யானை வாகனத்திலும் சுவாமி பவனி.
* குற்றாலம் குற்றாலநாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரத உற்சவம்.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் முத்தங்கி சேவை.
* காஞ்சீபுரம் பச்சை வண்ணன், பவள வண்ணன் கருட பரமபத வாசல் திறப்பு விழா.
* சமநோக்கு நாள்.

19-ந்தேதி (புதன்) :

* திருப்பதி நவநதி மகா தீர்த்தம்.
* நாச்சியார்கோவில் தெப்ப உற்சவம்.
* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் காலை ருத்ராட்சி விமானத்தில் பிட்டுக்கு மண்சுமந்த லீலை.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கும்பகோணம் சாரங்கபாணி ஆகிய தலங்களில் இராபத்து உற்சவ சேவை.
* சங்கரன்கோவில் சங்கரநாராயணர் யானை வாகனத்திலும், கோமதி அம்மன் அன்ன வாகனத்திலும் வீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.

20-ந்தேதி (வியாழன்) :


* பிரதோஷம்.
* சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சுவாமி கயிலாய வாகனத்தில் வீதி உலா.
* சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் அஷ்டாபிஷேகம்.
* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் எல்லாம் வல்ல சித்தராய் இரவு வெள்ளி குதிரையில் சேவகனாக காட்சியருளல்.
* வீரவநல்லூர் சுவாமி விசேஷ அலங்கார சப்பரத்தில் பவனி.
* காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், மதுரை கூடலழகர் ஆகிய ஆலயங்களில் உற்சவ சேவை.
* கீழ்நோக்கு நாள்.

21-ந்தேதி (வெள்ளி) :

* சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஈசன் தங்க ரதத்தில் பிச்சாண்டவர் திருக்கோல காட்சி.
* திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் மகா ரத உற்சவம், மாலை ஆனந்த தாண்டவ காட்சி.
* சங்கரன்கோவில் சங்கரநாராயணர் தந்த பல்லக்கில் வீதி உலா.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ஆகிய தலங்களில் இராபத்து உற்சவ சேவை.
* மேல்நோக்கு நாள்.



22-ந்தேதி (சனி) :


* பவுர்ணமி.
* தத்தாத்ரேயர் ஜெயந்தி.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இரவு நடராஜர் மகா அபிஷேகம்.
* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் பஞ்ச பிரகார உற்சவம், இரவு வெள்ளி ரதம்.
* சிதம்பரம் நடராஜ மூர்த்தி- சிவகாமசுந்தரி ரத உற்சவம், இரவு இருவரும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளல்.
* சங்கரன் கோவில் சங்கரநாராயணர் ஆலயத்தில் ரத உற்சவம்.
* திருமோகூர் காளமேகப் பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் திருவாய்மொழி உற்சவம்.
* சமநோக்கு நாள்.

23-ந்தேதி (ஞாயிறு) :

* ஆருத்ரா தரிசனம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தாம்பிரசபா நடனம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் பார்வதி அம்மன் ஊஞ்சல் சேவை.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ராட்டினம், பொன்னூஞ்சல்.
* ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகருக்கு இறைவன் உபதேசம் வழங்கிய காட்சி.
* சிதம்பரம் ஆடல்வல்லபிரான் சித்திரசபையில் சிதம்பர ரகசிய பூஜை.
* மேல்நோக்கு நாள்.

24-ந்தேதி (திங்கள்) :

* காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கமன்னார், மதுரை கூடலழகர் ஆகிய தலங்களில் இராபத்து உற்சவ சேவை.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

Tags:    

Similar News