ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் - 23.1.2018 முதல் 29.1.2018 வரை

Published On 2018-01-23 04:02 GMT   |   Update On 2018-01-23 04:02 GMT
23.1.2018 முதல் 29.1.2018 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
23-ந்தேதி (செவ்வாய்) :

* சஷ்டி விரதம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வெள்ளி சிம்மானத்தில் சுவாமி பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, இரவு தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு.
* திருச்சேறை சாரநாதர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.

24-ந்தேதி (புதன்) :

* ரத சப்தமி.
* திருப்பதியில் வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் ரத சப்தமி திருவிழா.
* திருச்சேறை சாரநாதர் சூரிய பிரபையில் பவனி, வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சியருளல்.
* கோவை பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் உற்சவம் ஆரம்பம்.
* காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் கருட சேவை.
* திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் சிம்மாசனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.

25-ந்தேதி (வியாழன்) :

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலி கட்டின திருவிளையாடல், ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.
* திருச்சேறை சாரநாதர், பரமபதநாதராக சேஷ வாகனத்தில் வீதி உலா.
* பழனி முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பச்சைக் குதிரை வாகனத்தில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

26-ந்தேதி (வெள்ளி) :

* கார்த்திகை விரதம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி நந்தீஸ்வரர் வாகனத்திலும், அம்பாள் யாழி வாகனத்திலும் பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சின்ன வைரத் தேரில் ரத உற்சவம், இரவு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.
* திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட சேவை.
* கோவை பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.



27-ந்தேதி (சனி) :

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலையில் தந்த பல்லக்கில் பவனி, மாலையில் தங்க குதிரையில் சுவாமியும், தங்கப் பல்லக்கில் அம்பாளும் வீதி உலா.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்தில் தெப்ப உற்சவம், இரவு தங்க தேரில் சூரசம்கார காட்சி.
* திருச்சேறை சாரநாதர் ராம அவதார காட்சி அருளல்.
* கோவை பாலதண்டாயுதபாணி யானை வாகனத்தில் வீதி உலா.
* மேல்நோக்கு நாள்.

28-ந்தேதி (ஞாயிறு) :

* முகூர்த்த நாள்.
* வைஷ்ணவ ஏகாதசி.
* திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாண உற்சவம், இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரத்தில் சுவாமி வீதி உலா.
* மதுரை மீனாட்சி காரை எடுப்பு தேரில் பவனி.
* காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் ரத உற்சவம்.
* கோவை பாலதண்டாயுதபாணி அன்ன வாகனத்தில் புறப்பாடு.
* குன்றக்குடி முருகப்பெருமான் வெள்ளி கேடயத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.

29-ந்தேதி (திங்கள்) :

* பிரதோஷம்.
* காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் புறப்பாடு.
* திருச்சேறை சாரநாதர் சூர்ணோற்சவம்.
* கோவை பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் பவனி.
* பழனி முருகப்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும் வீதி உலா.
* சகல சிவன் கோவில்களிலும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
* மேல்நோக்கு நாள்.

Tags:    

Similar News