முக்கிய விரதங்கள்

சிவபெருமானின் அருளை பெற அனுஷ்டிக்க வேண்டிய 8 விரதங்கள்...

Published On 2023-05-27 07:08 GMT   |   Update On 2023-05-27 07:08 GMT
  • சிவவழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன.
  • ருத்திரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று பொருள்.

இந்து புராணங்களின்படி சிவபெருமானே மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக கருதப்படுகிறார். இவருடைய நெற்றிக்கண் உலகில் உள்ள தீமைகளை அழிக்கும் என அனைவராலும் நம்பப்படுகிறது.

சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெறும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. சிவவழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன. இதிகாசங்கள் எடுத்துரைக்கின்றன. உபநிஷதங்கள் உணர்த்துகின்றன. வேதங்களிலும், உபநிஷத்துகளிலும் சிவபெருமான், ருத்திரன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். ருத்திரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று பொருள்.

சிவனருள் பெற விரும்புவோர் எட்டு விதமான விரதங்களை மேற்கொண்டு நன்மை பெறலாம்.

1. சோமவார விரதம் – வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் இருப்பது

2. உமாமகேஸ்வர விரதம் கார்த்திகை பவுர்ணமியன்று (திருக்கார்த்திகை) இருப்பது

3. திருவாதிரை விரதம் – மார்கழி திருவாதிரையன்று விரதமிருப்பது

4. சிவராத்திரி விரதம் – மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று வருவது

5. கல்யாண விரதம் – பங்குனி உத்திர நாளில் கடைபிடிப்பது

6. பாசுபத விரதம் – தைப்பூசத்தன்று மேற்கொள்ளும் விரதம்

7. அஷ்டமி விரதம் – வைகாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று அனுஷ்டிப்பது.

8. கேதாரகவுரி விரதம் – ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி அல்லது அதன் மறுநாள்) இருப்பது...

Tags:    

Similar News