ஆன்மிகம்
நாகராஜா கோவில்

கால சர்ப்ப தோஷம் நீங்க நாகராஜருக்கு விரதம் இருந்து வழிபடுங்க..

Published On 2021-02-12 08:04 GMT   |   Update On 2021-02-12 08:04 GMT
காலசர்ப்பம் முதலான சர்ப்ப தோஷங்கள் அனைத்தையும் நீங்க நாகராஜரை விரதம் இருந்து வழிபடுங்கள். திருமணத் தடைகள் நீங்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
காலசர்ப்பம் முதலான சர்ப்ப தோஷங்கள் அனைத்தையும் நீக்கவல்லது நாகராஜ விரத வழிபாடு. நாகராஜரை விரதம் இருந்து வழிபடுங்கள். நாகராஜ காயத்ரி சொல்லுங்கள். திருமணத் தடைகள் நீங்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

நவக்கிரகங்களில், ராகுவும் கேதுவும் சர்ப்ப கிரகங்கள். சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் முதலானவை இருந்தால், திருமணம் முதலான சந்ததி தடைகள் வரும். காரியத்தில் தடைகள் இருந்துகொண்டே இருக்கும்.

எதைத் தொட்டாலும் நஷ்டம், தோல்வி, அவமானம் என சந்திக்கும்படியான சூழல்கள் இருக்கும். திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். எந்த வேலையிலும் நீடிக்காமல், வேலை விட்டு வேலை என்று மாறிக்கொண்டே இருக்கும் சூழல் உருவாகும்.

கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள், குடும்பத்தில் குழப்பங்கள் என நிம்மதியக் குலைக்கவல்லது சர்ப்ப தோஷம்.

சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விரதம் இருந்து ராகுகால வேளையில் நாகராஜ வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். குறிப்பாக, எல்லா நாட்களிலும் உள்ள ராகுகாலவேளையில், விரதம் இருந்து நாகராஜரை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தந்தருளும்.
Tags:    

Similar News