ஆன்மிகம்
பைரவர்

செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து நம்பிக்கையுடன் கோரிக்கைகள் வைத்தால் நிறைவேற்றும் பைரவர்

Published On 2021-02-09 05:48 GMT   |   Update On 2021-02-09 05:48 GMT
விரதம் இருந்து உங்களின் உண்மையான கோரிக்கைகள் நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது ஒரே மாதத்தில் நிறைவேறும் என்கின்றனர் ஆன்மீகப் பெரியவர்கள்.
விரதம் இருந்து உங்களின் உண்மையான கோரிக்கைகள் நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது ஒரே மாதத்தில் நிறைவேறும் என்கின்றனர் ஆன்மீகப் பெரியவர்கள்.

வெல்லம் கலந்த பாயசம், உளுந்துவடை, பால், தேன், பழம் வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும். ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தன செழிப்பை தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

பௌர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பௌர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம்.

நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படியாக கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது.

ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது. சித்திரை -பரணி, ஐப்பசி -பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விஷேச நாட்கள் ஆகும்.

ஏனெனில் பரணி நட்சத்திரம் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும். தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும்.
Tags:    

Similar News