ஆன்மிகம்
தசரா திருவிழா

தசரா திருவிழா: கடைப்பிடிக்க வேண்டிய விரத விதிமுறைகள்

Published On 2019-10-02 05:39 GMT   |   Update On 2019-10-02 05:39 GMT
தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக் கட்டி வேடம் அணிவோர் கீழ்க்கண்ட விரத விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக் கட்டி வேடம் அணிவோர் கீழ்க்கண்ட விரத விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேடம் அணிபவர்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்புக் கட்டிய பின்னரே வேடம் அணிதல் வேண்டும்.

வேடம் அணிபவர்கள் எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனிதத் தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும்.

வேடம் அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

வேடம் அணிபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது.

காளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10 வயதுக்குட்பட்டவராகவும் அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
Tags:    

Similar News