ஆன்மிகம்
தனாகர்ஷண ஹோமம்

தனாகர்ஷண ஹோமத்தை எப்படி விரதம் இருந்து செய்வது?

Published On 2019-08-07 08:22 GMT   |   Update On 2019-08-07 08:22 GMT
தனாகர்ஷண ஹோமத்தை எப்படி விரதம் இருந்து செய்வது மற்றும் இந்த ஹோமத்தை செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
செல்வங்கள் அனைத்தும் நம்மிடம் என்றென்றம் நிலையாக இருக்கவும், மேலும் செல்வ சேர்க்கை உண்டாகவும் செய்யப்படும் ஒரு ஹோமத்தையே தனாகர்ஷண ஹோம பூஜையாகும். இந்த தனாகர்ஷண ஹோமத்தை எப்படி விரதம் இருந்து செய்வது மற்றும் இந்த ஹோமத்தை செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குடும்பத்தில் செல்வ செழிப்பு உண்டாக விரதம் இருந்து தனாகர்ஷண ஹோமம் செய்ய வேண்டும். வட இந்தியாவில் தனலட்சுமி பூஜை மற்றும் ஹோமத்தை தீபாவளி சமயத்தில் செய்து வழிபடுகின்றனர். தாம் சேர்த்த பணம், பொன் போன்றவை அனைத்தையும் பூஜையில் வைத்து வழிபடுவர். தை மாத வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்த தினத்தில் இந்த தனாகர்ஷண ஹோமத்தைச் செய்வது சிறப்பு. விடியற்காலையில் குளித்து முடித்துவிட்டு, சுத்தமான அணிந்து கொண்டு, நெற்றிக்கு குங்கும திலகமிட்டு ஹோமத்திற்குத் தயாராக வேண்டும்.

சங்கல்பம் செய்து கொள்ளவும் பிறகு நம் செல்வத்தையெல்லாம் ஒரு குடத்திலிட்டு அதில் சுவர்ண லட்சுமியை ஆவாஹனம் செய்யவும் வட்டமான ஹோம குண்டத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜிக்கவும், தேவதா ஆஜ்யபாகம், சமிதா தானம் செய்யவும். பிறகு சுத்தமான பசு நெய், தாமரைப்பூ, தங்கக் காசு, சர்க்கரை பொங்கல் மூலம் 108 ஆவர்த்தி ஹிரண்யவர்ணா என்ற தேவ மந்திரம் உச்சாடனம் செய்து ஹோமம் செய்யபடும். அடுத்து பிராயச்சித்த ஹோமம் செய்யப்படும். சொக்கத் தங்கம், பட்டு முதலியவற்றுடன் மட்டைத் தேங்காய் வைத்து பூர்ணாஹீதி செய்து ஹோமம் பூஜை நிறைவு செய்யப்படும்.

கற்கண்டு பாலுடன் செய்த பொங்கல் நைவேத்யம் செய்து, மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டு தனாகர்ஷண ஹோமம் நிறைவு பெறும். முற்காலத்தில் கேரள தேசத்தில் தங்கத்தை உருக்கி ஹோமத்தீயில் நெய்போல் விட்டு இந்த ஹோமம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பூஜை செய்யப்பட்ட சுவர்ணலட்சுமி குடத்தை எடுத்துக் கொண்டு, பிரசாதத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தன ஆகர்ஷன ஹோமம் செய்வதால் வீட்டில் லட்சுமி குடி புகுந்து செல்வச் செழிப்பு அருள்வாள் என்கிறது வேதம். இந்த ஹோமம் முக்கியமாக தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிகுந்த லாபங்களையும், தொழில் விருத்தியையும் ஏற்படுத்தவல்ல ஆற்றல் வாய்ந்த ஒரு ஹோம பூஜையாக இருக்கிறது. பணம், பொன் போன்றவற்றின் சேர்க்கை அதிகம் உண்டாக விரும்புபவர்கள் இந்த ஹோமத்தை செய்வது நல்ல பலன் அளிக்கும். வசதியான வீடு, வாகனம் மற்றும் சொத்துக்களின் பெருக்கத்தையும் இந்த ஹோம பூஜை ஏற்படுத்தும்.
Tags:    

Similar News