ஆன்மிகம்

திருமண வரம் தரும் ராகு விரத வழிபாடு

Published On 2018-03-22 08:20 GMT   |   Update On 2018-03-22 08:20 GMT
நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வரும் பெண்கள் விரதமிருந்து கீழ்கண்ட ராகு வழிபாட்டை செய்து விரைவில் திருமணம் கூடிவரப் பெறலாம்.
நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வரும் பெண்கள் விரதமிருந்து கீழ்கண்ட ராகு வழிபாட்டை செய்து விரைவில் திருமணம் கூடிவரப் பெறலாம்.

திருமணம் ஆகாத பெண்கள் விரதமிருந்து ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட வேண்டும். இவ்வாறு செய்து வர அப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடிவரும்.

திருமண வாழ்க்கையில் பிரச்சனையைக் காண்பவர்கள் அப்பிரச்சனையில் இருந்து விடுதலை பெற வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து ராகு காலத்தில் (காலை 10.30 - 12.00 மணிவரை) தீபம் ஏற்றி வணங்குதல் வேண்டும். இவ்வாறு 11வாரம் செய்து முடித்த பிறகு 12வது வாரம் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டினைச் செய்ய திருமண வாழ்வில் தம்பதியினருக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.

திருமண வரம் கூடிவந்தவுடன் காணிக்கையாக 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக்கி அம்மனுக்கு சாற்றலாம். அதேபோல் தம்பதிகள் மேற்கண்ட வழிபாட்டை செய்து தங்கள் பிரச்சனை தீர்ந்தவுடன் அரசுக்குக் கலர் பட்டுப் பாவாடை சாற்றலாம்.
Tags:    

Similar News