ஆன்மிகம்

வளர்பிறை அஷ்டமி விரத பூஜை

Published On 2017-12-19 09:43 GMT   |   Update On 2017-12-19 09:43 GMT
செல்வங்களை அதிகரிக்க ராகுகாலத்தில் விரதமிருந்து 11 சொர்ணாகர்ஷண பைரவருக்கு வழிபாடு செய்தால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிட்டும்.
அஷ்டமியில் அஷ்ட லட்சுமிகள் தங்கள் செல்வங்களை அதிகப்படுத்தி கொள்ள ராகுகால நேரத்தில் பைரவரை வழிபாடு செய்ததாக சாஸ்திரம் கூறுகிறது. 

நாமும் ராகுகால நேரத்தில் விரதமிருந்து 11 சொர்ணாகர்ஷண பைரவருக்கு மந்திரத்தை கூறி வழிபாடு செய்தால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிட்டும். 

வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும்.

வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து 8 மாதமும் கோவிலுக்கு வந்து காசு வைத்து பூஜை செய்ய வேண்டும். 48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை ‘ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும். 

Tags:    

Similar News