ஆன்மிகம்

குழந்தை செல்வம் அருளும் விரதம்

Published On 2017-12-15 10:25 GMT   |   Update On 2017-12-15 10:25 GMT
கண்ணனின் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி அன்று உரிய முறையில் விரதம் இருந்த வேண்டிக்கொண்டால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.
கண்ணன் அவதரித்த ரோகிணி நட்சத்திரத்தை வைணவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்பார்கள். கண்ணனின் பிறந்த நாளான அன்று உரிய முறையில் விரதம் இருக்க வேண்டும். அது மட்டுமின்றி பலவகைப் பட்சணங்களை இல்லத்தில் தயார் செய்து வைத்து இரவில் கண்ணனைப் பூஜை செய்து வணங்குவது வழக்கம். அப்பொழுது கண்ணன் புகழ் பாடும் கீதங்கள், சரிதங்கள் ஆகியவற்றைப் படிக்கலாம்.

கணவன், மனைவி இருவருமே செய்யத்தக்க விரதம் இது. பகலில் உபவாசம் இருந்து இரவில் ஸ்ரீ கிருஷ்ணனைப் பூஜித்து, அவரது சரிதத்தைக் கேட்டு கண் விழிப்பார்கள். பாகவதத்தில் கிருஷ்ணனின் அவதாரக் கட்டத்தைக் கேட்பதும், பாராயணம் செய்வதும், பாகவதம் கேட்பதும் மிகவும் புண்ணியமாகும்.
கண்ணன் மேல் மிகவும் மனதை பறிகொடுத்து விரதம் இருப்பவர்களுக்கு மங்களகரமான பலன்கள் அனைத்தும் கைகூடும். குழந்தைச் செல்வம் தருவதுடன் சகல சவுபாக்கியங்களையும் அருளி முக்தி நலத்தையும் கண்ணன் தருவான்.

Tags:    

Similar News