ஆன்மிகம்
விநாயகர், முருகனுக்கு உகந்த விரதம்
திருமண தடை, சிறந்த வாழ்க்கை துணை அமைய விநாயகர், முருகனுக்கு உகந்த இந்த இரு விரதங்களை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
விநாயகர் சஷ்டி விரதம் :
கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறை சஷ்டி வரை, 21 நாட்கள் விநாயகரை நினைத்து மேற்கொள்ளப்படும் விரதம் இது. இந்த விரதத்தின்போது, 21 இழைகளால் ஆன நோன்பு கயிற்றினை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்வார்கள். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு், கடைசி நாள் முழுமையாக உபவாசம் இருக்க வேண்டும். இந்த விரதத்தால் சிறந்த வாழ்க்கைத் துணை அமையும். புத்திசாலியான புத்திரர்கள் கிடைப்பார்கள். எடுத்த காரியங்கள் வெற்றியாகும்.
கார்த்திகை விரதம் :
இது முருகப்பெருமானை நினைத்து, கார்த் திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத் தில் கடைப்பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைப்பிடிக்க வேண்டிய இந்த விரத முறையில், பகல் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்ய வேண்டும். இந்த விரதத் தால் வாழ்வில் பதினாறு வகையான செல்வங் களையும் பெறலாம்.
கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறை சஷ்டி வரை, 21 நாட்கள் விநாயகரை நினைத்து மேற்கொள்ளப்படும் விரதம் இது. இந்த விரதத்தின்போது, 21 இழைகளால் ஆன நோன்பு கயிற்றினை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்வார்கள். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு், கடைசி நாள் முழுமையாக உபவாசம் இருக்க வேண்டும். இந்த விரதத்தால் சிறந்த வாழ்க்கைத் துணை அமையும். புத்திசாலியான புத்திரர்கள் கிடைப்பார்கள். எடுத்த காரியங்கள் வெற்றியாகும்.
கார்த்திகை விரதம் :
இது முருகப்பெருமானை நினைத்து, கார்த் திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத் தில் கடைப்பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைப்பிடிக்க வேண்டிய இந்த விரத முறையில், பகல் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்ய வேண்டும். இந்த விரதத் தால் வாழ்வில் பதினாறு வகையான செல்வங் களையும் பெறலாம்.