ஆன்மிகம்

பிள்ளைப் பாக்கியம் அருளும் ராம நவமி விரதம்

Published On 2017-11-01 06:51 GMT   |   Update On 2017-11-01 06:52 GMT
ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமியாகும். ராம நவமி விரதத்தை தவறாமல் கடைப்பிடிப்பவர்களுக்கு பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும்.
ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமியாகும். இது ஆண்டுதோறும் சித்திரை மாதம் நவமியும் புனர்வசு நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளில் வரும்.
ஸ்ரீராமன் பிறந்த தினத்தோடு முடியும். பத்து நாட்கள், முன் பத்து எனப் பெறும். பிறந்த தினத்திலிருந்து கொண்டாடப்பெறும் பின் பத்து நாட்கள், பின் பத்து எனப்பெறும். சில வைணவத் தலங்களில் இத்தினங்களை முன்பத்து, பின்பத்து என்று மிகவும் சிறப்பான திருவிழாவாகக் கொண்டாடுவார்கள்.

இந்நாட்களில் விரதம் இருந்து ராமாயணம் படிப்பதும், சொற்பொழிவுகள் செய்வதும் உண்டு. பூஜைகளும் நிகழும். ராமாயணம் படித்துப் பட்டாபிஷேகம் செய்து ஆஞ்சநேயர் உற்சவமும் செய்து பூர்த்தி செய்வார்கள்.

பானகம், நீர்மோர், சந்தனம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவை வினியோகங்களாக அமையும். விளக்கு ஏற்றும்பொழுது நாராயணனுக்கு உரிய நல்லெண்ணை ஊற்றி ஏற்றுவது சிறப்பாகும்.

ராம நவமி விரதத்தை தவறாமல் கடைப்பிடிப்பவர்களுக்கு பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும். இதுதவிர புரட்டாசி மாதத்திலும் ராமாயணம் முழுவதையும் ஒரு மாத காலத்திற்குப் படித்துப் பொருள் சொல்வதுண்டு.
Tags:    

Similar News