ஆன்மிகம்
சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

Published On 2021-04-17 05:01 GMT   |   Update On 2021-04-17 05:01 GMT
தற்போது நோன்பு நோற்றிற்கும் இஸ்லாமியர்கள் வீரவனூர் முத்துவயல், முகமதியாபும், போகலூர் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிவாசலில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியத்தில் சமூக இடைவெளியுடன் தொழுகையை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கடந்த ஆண்டு அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.

இதனால் கோவில்கள், தேவாலயம், பள்ளிவாசல்கள் என அனைத்துமே கடந்த ஆண்டு மூடப்பட்டது. பொதுமக்கள் தங்களின் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். தற்போதும் கொரோனா தொற்றி னால் பள்ளிவாசல்களில் இரவு 8 மணி வரை கால அவகாசம் கொடுக் கப்பட்டது. பின்னர் நோன்பு காலம் என்பதால் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது நோன்பு நோற்றிற்கும் இஸ்லாமியர்கள் இப்பகுதியில் உள்ள வீரவனூர் முத்துவயல், முகமதியாபும், போகலூர் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிவாசலில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தி வருகின்றனர். கடந்த வருடத்தை போல் நோன்பு காலங்களில் பள்ளிவாசலில் தொழுகை நடைபெறாமல் இருந்தது. தற்போது நோன்பு நேரத்தில் பள்ளிவாசலில் தொழுவது மன நிறைவை தருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Tags:    

Similar News