ஆன்மிகம்
முருகப்பெருமான்

செவ்வாய் தோஷம் போக்கும் திருக்கார்த்திகை வழிபாடு

Published On 2020-11-28 04:14 GMT   |   Update On 2020-11-28 04:14 GMT
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் அச்சமின்றி வாழ, திருக்கார்த்திகை (29-11-2020) அன்று முருகப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் உடனடியாக நற்பலன்கள் கிடைக்கும்.
திருமணப் பொருத்தம் பார்க்கின்ற போது, ‘செவ்வாய் ஜாதகமா?’ என்று சிலர் பார்ப்பார்கள். பெண்ணிற்கு செவ்வாய் தோஷ ஜாதகம் என்றால், மாப்பிள்ளைக்கும் அதேபோல் இருக்க வேண்டும். செவ்வாய்க்குரிய தெய்வம் முருகப்பெருமான் மற்றும் சக்தி என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

எனவே செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் அச்சமின்றி வாழ, முருகப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் உடனடியாக நற்பலன்கள் கிடைக்கும். தோஷம் விலகி யோகம் சேரும்.

இந்த மாதம் திருக்கார்த்திகை (29-11-2020) வருகின்றது. அன்றைய தினத்தில் வீட்டின் பூஜை அறையில், முருகப்பெருமானை நினைத்து உள்ளம் உருகி வழிபடலாம். திருப்புகழ் படித்தால் விருப்பங்கள் நிறைவேறும்.
Tags:    

Similar News