ஆன்மிகம்
லட்சுமி நரசிம்மர்

கடன் தொல்லை, பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் பரிகாரம்

Published On 2020-05-23 08:45 GMT   |   Update On 2020-05-23 08:46 GMT
பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், கடன் தொல்லை நீங்கவும், தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தில் உள்ள லட்சுமி நரசிம்மருக்கு 12 புதன்கிழமை தொடர்ந்து 2 நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும் என்பது ஐதீகம்.
தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தில் மூலவரின் பின்புறம் லட்சுமி நரசிம்மர் சன்னதி உள்ளது. பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், கடன் தொல்லை நீங்கவும், வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு கிடைக்கவும், மன அழுத்தம் நீங்கவும் 12 புதன்கிழமை தொடர்ந்து 2 நெய் தீபம் ஏற்றி, லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும் என்பது ஐதீகம்.

பிரகலாதனை காக்க நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள், இரணியனை வதம் செய்தது பிரதோஷ காலம் என்பதாலும், சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்ததாலும், பிரதோஷம் மற்றும் சுவாதி நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

Tags:    

Similar News