ஆன்மிகம்
பூமி தோஷம் நீங்க பரிகாரம்

பூமி தோஷம் நீங்க பரிகாரம்

Published On 2020-05-11 08:58 GMT   |   Update On 2020-05-11 08:58 GMT
வாஸ்து குற்றம் உள்ள வீட்டில் குடியிருக்கும் நிலை, பூமியில் நீராதாரம் இல்லாமல் போவது. கட்டிய வீடு தலைமுறைகளைக் கடந்தும் அடமானத்திலேயே இருப்பது போன்ற குறைபாடுகள் இதனால் தோன்றும்.
பூமியின் அதிர்வலைகளில் உள்ள தோஷமே பூமி தோஷமாகும். பல தலைமுறையாக முன்னேற்றமின்மை சொந்த பூமியை பல தலைமுறையாக பயன்படுத்தவும் விற்கவும் முடியாமல் தவிப்பது. வாங்கிய நிலத்தில் வீடு கட்ட முடியாத நிலை. வீடு கட்டும் பொழுது தொடர் அசம்பாவிதம் ஏற்படுவது. பாதி கட்டிய நிலையில் வீட்டு வேலை நின்று விடுவது. இல்லத்தில் துர்ஷ்ட சக்திகள் இருப்பது போன்ற உணர்வு. நீங்காத நோய், தலைமுறையாக தொடர் நோய். வாஸ்து குற்றம் உள்ள வீட்டில் குடியிருக்கும் நிலை, பூமியில் நீராதாரம் இல்லாமல் போவது. கட்டிய வீடு தலைமுறைகளைக் கடந்தும் அடமானத்திலேயே இருப்பது போன்ற குறைபாடுகள் இதனால் தோன்றும்.

பரிகாரம்

* காலி மனையாக இருந்தால் பூமியின் அதிர்வலைகளை மாற்றக் கூடிய பூமி பூஜை செய்யலாம்.

* கட்டிய வீடு கட்டிடமாக இருந்தால், வாஸ்து சாந்தி ஹோமம் நிகழ்த்தலாம்.

* செவ்வாய்க்கிழமை சிவப்பு நிற ஆடை அணிந்து விரதமிருந்து முருகனை வழிபாடு செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

* துர்க்கை கவசம் படிக்க வேண்டும்.

* செவ்வாய், சனி கிரக சம்பந்தம் இருப்பவர்கள், லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

* காலை, மாலை நேரங்களில் வீடு, அலுவலகத்தில் விஷ்ணு சகஸ்ஹர நாமம், காயத்ரி மந்திரம், சாந்தி மந்திரம், திருக்கோளறு பதிக பாராயணம் ஒலிக்கச் செய்ய வேண்டும்.

* சென்னை அருகில் உள்ள சிறுவாபுரி முருகனை வழிபட வேண்டும்.
Tags:    

Similar News