ஆன்மிகம்
மாரியம்மன்

குழந்தை வரம் தரும் மாரியம்மன்

Published On 2020-03-10 05:07 GMT   |   Update On 2020-03-10 05:07 GMT
குழந்தை வரம் வேண்டியும், விரைந்து திருமணம் நடக்க வேண்டியும், பிணி நீங்கி விரைவில் குணமாக வேண்டியும் வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை கனிவோடு நிறைவேற்றி தருகிறாள் குள்ள முத்து மாரியம்மன்.
கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மருதூர் என்ற பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள ராஜேந்திரம் ஊரின் நடுவே ஊர் மக்களைக் காக்கும் தெய்வமாய், கிராமத்தின் காவல் தெய்வமாய் கோவில் கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் அன்னை குள்ள முத்து மாரியம்மன்.

குழந்தை வரம் வேண்டியும், விரைந்து திருமணம் நடக்க வேண்டியும், பிணி நீங்கி விரைவில் குணமாக வேண்டியும் வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை கனிவோடு நிறைவேற்றி தருகிறாள் அன்னை. பயன் பெற்றோர் அன்னைக்கு புடவை வாங்கி சாத்தியும், குத்துவிளக்கு வாங்கி சன்னிதியில் வைத்தும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அம்மை நோய் கண்ட பலர் அம்மன் ஆலயத்திலேயே தங்கி, அம்மன் தீர்த்தத்தைப் பருகி குணமானதும் இல்லம் திரும்புவது இங்கு வழக்கமாக காணும் காட்சி.

தன்னை நாடும் பக்தர்கள் நலன் பல பெற்று வாழ அன்னை குள்ள முத்து மாரியம்மன் அருள்புரிவது கண்கூடான உண்மையே!

Tags:    

Similar News