ஆன்மிகம்
சூரிய வழிபாடு

ராஜயோகம் வந்து சேர பரிகாரம்..

Published On 2020-03-09 06:04 GMT   |   Update On 2020-03-09 06:04 GMT
ராஜயோகம் தரும் கிரகம் சூரியன் எனப்படும் ராஜகிரகமாகும். பிதுர்காரகன் என்று சூரியனை அழைப்பது வழக்கம். எனவே சூரிய பலத்தால்தான் தந்தை வழி சொத்துக்களால் நன்மை கிடைக்கும்.
ஒவ்வொருவரும் எப்போது யோகம் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பர். ராஜயோகம் தரும் கிரகம் சூரியன் எனப்படும் ராஜகிரகமாகும். பிதுர்காரகன் என்று சூரியனை அழைப்பது வழக்கம். எனவே சூரிய பலத்தால்தான் தந்தை வழி சொத்துக்களால் நன்மை கிடைக்கும்.

தந்தை அனுகூலமாக நடந்து கொள்வார். தான் இருக்கும் இடத்தில் இருந்து 7-ம் இடத்தைப் பார்க்கும் சூரியனுக்கு ஆட்சிவீடு சிம்மம். நீச்ச வீடு துலாம். உச்ச வீடு மேஷம் ஆகும். சித்திரையில் பிள்ளை பிறந்தால் சூரியன் உச்சம் பெறும்.

அதிலும் ஆண் குழந்தை சித்திரை மாதம் பிறந்து விட்டால் தந்தையின் முன்னேற்றத்தில் தடைகள் உருவாகாமல் இருக்க பரிகாரம் செய்வர். எனவே குழந்தை பிறந்த நட்சத்திர அடிப்படையில் அதற்குரிய ஸ்தலத்திற்கு சென்று சிறப்பு பரிகாரங்களைச் செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் சிறப்பான வாழ்க்கையை சூரியன் வழங்குவார்.

சூரியனுக்கு ஆதவன், ஆதித்தன், ஞாயிறு, ரவி, பார்கவன் என பலவிதப் பெயர்கள் உண்டு. அவர் ஒருவருக்கு சாதகாதிபதியாக அமைந்தால், அந்த நபருக்கு ராஜயோகம் கிட்டும். அரச பதவிகளும், அரசு தொடர்புகளால் ஆதாயமும் வந்துசேரும்.
Tags:    

Similar News