ஆன்மிகம்
காலபைரேஸ்வரர்

குழந்தை வரம் அருளும் காலபைரேஸ்வரர் கோவில் பைரவர்

Published On 2020-03-03 06:26 GMT   |   Update On 2020-03-03 06:26 GMT
காலபைரேஸ்வரர் கோவிலில் உள்ள பிந்து சரோவரா புஷ்கரணியில் குழந்தையில்லாத தம்பதியினர் காலபைரவரை பரிபூரணமாக நினைத்து புனித நீராடினால் குழந்தையின்மை நீங்கி விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
காலபைரவர் என்றவுடன் நமக்கெல்லாம் உடனடியாக ஞாபகத்திற்கு வருவது, பைரவரின் வாகனமாக இருக்கும் நாய்தான். பைரவரை தேய்பிறை அஷ்டமியில் அதிகாலையில் நீராடி விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வணங்கினால், ஆரோக்கியமான வாழ்க்கை, செல்வ வளம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்காக 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாண்டியா மாவட்டம் பெல்லூர் நகரில் உள்ள ஆதிசுன்சனகிரியில், கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் காலபைரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் பழமை வாய்ந்த பிந்து சரோவரா புஷ்கரணியும் உள்ளது. இந்த புஷ்கரணியில், குழந்தையில்லாத தம்பதியினர் காலபைரவரை பரிபூரணமாக நினைத்து புனித நீராடினால் குழந்தையின்மை நீங்கி விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
Tags:    

Similar News