ஆன்மிகம்
திருஷ்டி தோஷம்- பரிகாரம்

திருஷ்டி தோஷம்- பரிகாரம்

Published On 2020-02-25 05:49 GMT   |   Update On 2020-02-25 05:49 GMT
அன்றாட வாழ்வில் ஏராளமானவர்கள் சந்திக்கும் முக்கிய தோஷங்களும், அதற்கான பரிகாரங்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தினால் விரைவில் தீர்வு கிடைக்கும்.
‘கண் திருஷ்டி’ என்பது பொறாமை, கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலால் ஏற்படும். ஒருவரின் சுப அதிர்வலைகளானது, அசுப உணர்வு, தீய எண்ணம் கொண்டவர்களின் பார்வை பலத்தால் அசுப அதிர்வாக மாற்றப்பட்டுவிடும்.

அதனால் ஏற்படும் பாதிப்பு சிலருக்கு சிறியதாகவும், பலருக்கு தொடர்ச்சியான பின் விளைவுகளையும் தரும். திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு, வரவுக்கு மீறிய செலவு போன்றவை இருந்து கொண்டே இருக்கும்.

பரிகாரம்

* உப்பு சுற்றி போடுவது நல்ல பலன் தரும்.

* கற்பூரங்களை தலையைச் சுற்றி வீட்டு வாசலில் ஏற்றலாம்.

* தேங்காயில் கற்பூரம் ஏற்றி தோஷம் இருப்பவர்களின் தலையை சுற்றி, ஊர் எல்லையில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் விடலை போட வேண்டும்.

* திருஷ்டி தோஷம் மிகுதியாக இருந்தால் மகாகணபதி, மகா சுதர்சன ஹோமம் செய்தால் நல்ல பலன் தெரியும்.
Tags:    

Similar News