ஆன்மிகம்

சகல தோஷங்களை போக்கும் மூலை அனுமன்

Published On 2018-02-07 06:12 GMT   |   Update On 2018-02-07 06:12 GMT
தஞ்சாவூரில் மேலவீதியும், வடக்கு வீதியும் இணையும் வாயு மூலையில் உள்ள மூலை அனுமனை வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் விலகும்.
தஞ்சாவூரில் மேலவீதியும், வடக்கு வீதியும் இணையும் வாயு மூலையில் மூலை அனுமன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள 18 தூண்களிலும் நவக்கிரகங்கள் உள்ளிட்ட 18 தெய்வங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

எனவே 18 அகல் விளக்குகள் (மஞ்சள் துணியை திரியாக்கி) அல்லது 18 எலுமிச்சைப் பழங்களில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதனால் பில்லி, சூனியம், செய்வினை பாதிப்பு ஏற்படாது.

மேலும் இத்தல ஆஞ்சநேயருக்கு 18 என்ற எண்ணிக்கையில் வெற்றிலை மாலை சாத்தி, 18 முறை வலம் வந்து, உண்டியலில் 18 ரூபாய் செலுத்தி வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும். அதே போல் தொடர்ந்து 18 அமாவாசை தினங்களில் ஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.
Tags:    

Similar News