ஆன்மிகம்

கிரக தோஷம் விலக யோக பைரவர் வழிபாடு

Published On 2018-02-01 05:32 GMT   |   Update On 2018-02-01 05:32 GMT
மனிதர்களை ஆட்டிப்படைப்பது கிரகங்கள். ஒவ்வொரு கிரக பெயர்ச்சியின் போதும், யோக பைரவரை வணங்கி வழிபட்டால், வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சிவகாமசுந்தரி சமேத திருத்தனிநாதர் திருக்கோவில் இருக்கிறது. இங்கு தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறார், யோக பைரவர். இவரை ஆதி பைரவர் என்றும் அழைக்கிறார்கள்.

இவரிடம் இருந்து தான் அஷ்ட பைரவர்களான அசிதாவக பைரவர், உரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் ஆகியோர் தோன்றினர் என்கிறது புராணம்.,

இந்த எட்டு பைரவர்களில் ஒவ்வொன்றில் இருந்தும் எட்டு எட்டாக, ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக்கோலங்களை பைரவர் எடுத்ததாக கூறப்படுகிறது. இவற்றில் சில பைரவர் வாகனங்களோடும், சில வாகனங்கள் இல்லாமலும் பல பகுதிகளில் காட்சியளிப்பதை நாம் காணலாம்.

மனிதர்களை ஆட்டிப்படைப்பது கிரகங்கள். அந்த கிரகங்களை ஆட்டி வைத்து ஆட்சி செய்பவர், யோக பைரவர். ஒவ்வொரு கிரக பெயர்ச்சியின் போதும், யோக பைரவரை வணங்கி வழிபட்டால், வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.
Tags:    

Similar News