ஆன்மிகம்
பணப்பற்றாக்குறை நீங்கவும், வாங்கிய கடன் தீரவும் திருப்பவும் கடன் பெறாமல் இருக்கவும் கீழ்க்காணும் பரிகாரங்களை முறைப்படி செய்து பலன் பெறலாம்.
பணப்பற்றாக்குறை நீங்கவும், வாங்கிய கடன் தீரவும் திருப்பவும் கடன் பெறாமல் இருக்கவும், சேமிப்பு உயரவும், தீர்க்கமான அறிவை பெறவும், புத்தி தெளிவு பெறவும், நல்ல ஆசிரியம் மற்றும் புத்திசாலித்தனமான குழந்தை பெறவும், மலட்டுத்தன்மை நீங்கவும், நல்ல விஷய ஞானம் பெற்றிடவும் கீழ்க்காணும் பரிகாரங்களை முறைப்படி செய்து பலன் பெறலாம்.
கேது பகவானுக்கும், அதிதேவதையான சித்ரகுப்தன் அல்லது விநாயகருக்கும் 27 வெற்றிலையை மாலையாக கட்டி அணிவிக்கவும். கேதுவுக்கு பால் மற்றும் நெய் அபிஷேகம் செய்யவும். சிவப்பு, மஞ்சள், வெள்ளை சேர்ந்த வஸ்திரம் அணிவிக்கவும்.
எருக்கம்பூ மாலையும் அணிவிக்கலாம். பால் சாதம், தயிர் சாதம், மற்றும் நவதான்ய வகைகளை வேகவைத்து சுண்டலாக செய்து படைக்கவும். நெய் தீபம் ஏற்றி வழிபடவும். மேலும் சாஷ்டாங்க நமஸ்காரம் அவசியம். இவரது பெயருக்கும், பரிகாரம் செய்வபரின் பெயர் ஜென்ம ராசி, நட்சத்திரம் கூறி அர்ச்சனை செய்யவும். இயன்ற பேருக்கு அன்னதானம் வழங்கவும். இவ்வாறு தொடர்ந்து அல்லது மூன்று முறை செய்து வந்தால் கேதுவால் ஏற்பட்ட தோஷம் விலகி அருள் கிடைக்கும்.
இயன்றபொழுதெல்லாம் கேதுவையும் விநாயகரையும் வழிபட வேண்டும்.