ஆன்மிகம்

பணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்

Published On 2018-01-02 07:14 GMT   |   Update On 2018-01-02 07:14 GMT
பொன்னேரி அருகே தேவதானத்தில் உள்ள ரங்கநாதர் பெருமாளை 11 வாரங்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், பணக் கஷ்டம், திருமண தடை நீங்கும்.
வடஸ்ரீரங்கம் என்று சொல்லப்படும் பொன்னேரி அருகே உள்ள தேவதானத்தில் ரங்கநாதர் ஆலயம் உள்ளது. 

இந்த ஸ்ரீரங்கநாத பெருமாளை அமாவாசை நாளன்றும், வெள்ளிக்கிழமைகளிலும் தொடர்ந்து 7 மற்றும் 11 வாரங்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், பணக் கஷ்டம், திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு கிடைக்கும். நினைத்த காரியங்கள் நினைவேறும் என்பது ஐதீகம்.

பெருமாளுக்கு இடதுபுறமாக ரங்கநாயகி தாயார் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு அருகில் சக்கரத்தாழ்வார் சன்னிதி இருக்கிறது. அதன்கு பின்புறம் புற்றுக்கோவிலும், தனிச் சன்னிதியில் ஆண்டாளும் இருக்கின்றனர்.

இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகுவதுடன், நினைத்த காரியம் நிறைவேறுவதை நாமும் கண்டு பயனடையலாம்.
Tags:    

Similar News