ஆன்மிகம்
செவ்வாயால் திருமணம் தோஷம் ஏற்பட்டிருந்தால், செவ்வாய்க்கிழமையில் முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
செவ்வாயால் திருமணம் தோஷம் ஏற்பட்டிருந்தால், செவ்வாய்க்கிழமையில் முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. வைத்தீஸ்வரன்கோவில் சென்று அங்காரகப் பிரீதி செய்துகொள்வது நல்லது.
பூமி தேவி வழிபாடும் ஆண்டாள் வழிபாடும் நலம் தரும். கருங்காலி சமித்து கொண்டு ஹோமம் செய்வதும் துவரம்பருப்பு தானம் செய்வதும் நன்மை தரும். குறிப்பாகச் செவ்வாய்தோறும் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதுடன், கந்தசஷ்டி கவசம் போன்ற முருகனுக்குரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்வதும் மிகவும் விசேஷமான நற்பலன்களைக் கொடுப்பதுடன், நல்ல திருமண வாழ்க்கையைப் பெற்றுத் தரும்.