ஆன்மிகம்
சனிதோஷம் உள்ளவர்கள், ஏழரை சனி நடப்பவர்கள் சனிக்கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை செய்து வந்தால் பலன் அடையலாம்.
சனியால் திருமண தோஷம் ஏற்பட்டிருந்தால், சனிக்கிழமையில் எமனையும் பிரஜாபதியையும் வழிபடுவது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதும், ஹனுமன் சாலீஸா படிப்பதும் மிகவும் நல்லது. வன்னி சமித்தால் ஹோமம் செய்வதும் எள் தானம் செய்வதும் சிறப்பாகும்.
ஒருமுறை திருநள்ளாறு திருத்தலத்துக்குச் சென்று, ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரையும், சனி பகவானையும் முறைப்படி வழிபட்டு வாருங்கள். வயோதிகர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவுங்கள்.
தினமும் காகத்திற்கு சாதம் வையுங்க. சனிக்கிழமைகளில் காகத்திற்கு உணவு வைத்த பின்னர் உணவு அருந்துங்கள்.
சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.