ஆன்மிகம்

ஏழரை சனி, அஷ்டம சனி குழந்தைகளுக்கு என்ன செய்யும்?

Published On 2017-11-17 06:40 GMT   |   Update On 2017-11-17 06:41 GMT
ஏழரை சனியின் போது சனி பிறப்பு ஜாதகத்தில் சந்திரனை கடந்து செல்வார். அப்போது வாழ்க்கையில் பல மறக்க முடியாத பாடங்களை கற்றுக்கொடுத்து விடுகிறார்.
குழந்தைகளுக்கு ஏழரை சனி நடக்கும்போது தாய்க்கு உடல்நலம் பாதிப்பு, குழந்தை படும் சிரமத்தால் மனக்கவலை, தந்தைக்கு அதிக செலவுகள், குழந்தையால் உண்டாகும் செலவாகவும் இருக்கலாம். வருமான குறைவு இருப்பதையும் காண்கிறோம். இக்காலகட்டத்தில் குழந்தைகளை அதிகம் கண்டிக்காமல் இருப்பது நல்லது. இல்லையேல் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள்.

சிறு குழந்தைகள் எனில் அடிக்கடி உடல்நலக்குறைவு உண்டாவதும், பத்து வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எனில் அதிக பிடிவாதம், கல்வியில் கவனம் செலுத்தாமை, வீட்டுப் பாடம் செய்யாமல் அலட்சியம், பள்ளியில் குறும்பு செய்து, புகார் வருதல் என ஏழரை சனி படுத்தும்.

சனிக்கிழமை அக்குழந்தைகளை அழைத்து சென்று அருகில் இருக்கும் சிவன் கோயிலில் உள்ள நவகிரகங்களில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

சனிக்கிழமை காக்கைக்கு சாதம் வைப்பது, ஆஞ்சநேயரை வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.
Tags:    

Similar News