ஆன்மிகம்

செவ்வாய் தோஷம் போக்கும் செந்தில்நாதன்

Published On 2017-11-14 10:12 GMT   |   Update On 2017-11-14 10:12 GMT
இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை 2-12-2017 (சனிக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் திருமணத் தடை அகலும்.
ஒவ்வொரு மாதமும் கார்த்திகை வந்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையை மட்டுமே ‘திருக்கார்த்திகை’ என்று அழைக்கிறோம். அந்த நாளில் கார்த்திகேயனை நினைத்து விரதமிருந்து வழிபட்டு செவ்வாய் தோஷம் நீங்க வழியமைத்துக் கொள்ளலாம்.

புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி விழாவில் சக்தி வழிபாட்டை ஒன்பது நாட்கள் கடைப்பிடித்தப் பிறகு, அடுத்து வரும் கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

இடையில் வரும் ஐப்பசியில் கந்தசஷ்டி விழாவையும் கண்டுமகிழ்ந்து விரதமிருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தோஷங்கள் விலகி சந்தோஷங்கள் வந்து சேரும். இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை 2-12-2017 (சனிக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் திருமணத் தடை அகலும்.
Tags:    

Similar News