ஆன்மிகம்

பைரவரை வணங்குதலால் ஏற்படும் பலன்கள்

Published On 2017-03-30 06:10 GMT   |   Update On 2017-03-30 06:10 GMT
பைரவரை தினமும் வழிபாடு செய்வதால் தோஷங்கள், அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பைரவரை வழிபாடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும். பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப் பெருமானை அடையும் சாகாக் கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும்.

1. தலை குனியா வாழ்க்கை.
2. சுப மங்களம் ஊர்ஜிதம்.
3. தீயவினைகள் முற்றிலும் அழிவு.
4. பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல்.
5. தடையில்லாமல் சவுகரியம் ஏற்படுதல்.
6. கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம்.
7. கிரகன தோஷங்களின் பாதிப்பு விலகுதல்.
8. வாழ்ந்த ஜனனங்களின் பிறவியை புனிதப்படுத்துதல்.
9. இறைவனை எளிதாக உணர்தல்.
10. உலக உயிரினங்களின் காவல் தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்தி விடுதல்.

Similar News