ஆன்மிகம்
தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்த போது எடுத்த படம்.

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2021-07-28 04:52 GMT   |   Update On 2021-07-28 04:52 GMT
தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத்தில் தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலி, மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆசீா் நடக்கிறது.
தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடந்தது. மாலையில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக தத்து கொடியை ஆலயத்தை சுற்றி வந்து காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

பின்பு நற்கருணை ஆசீருடன் கொடியை பங்குதந்தை ஜெரால்ட் ரவி அர்ச்சித்து தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அருட்தந்தை ரினோ மறையுரை வழங்கினார். இதில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலி, மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆசீா் நடக்கிறது. 8-ம் திருவிழாவான வருகிற 3-ந் தேதி காலையில் வடக்கன்குளம் மறை மாவட்ட முதன்மை குரு ஜான்பிரிட்டோ தலைமையில் திருயாத்திரை திருப்பலி, மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.

9-ந் திருவிழாவான 4-ந் தேதி காலையில் திருப்பலியும் திருயாத்திரையும் நடக்கிறது. மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் ஜெபமாலையும், மன்றாட்டு மாலையும் நடக்கின்றது. தொடர்ந்து மலையாள திருப்பலியும் நடக்கிறது. 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது.

10-ம் திருவிழாவான 5-ந் தேதி பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெரால்ட் ரவி, உதவி பங்கு தந்தை ஜார்ஜ் அந்தோணி, தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாககுழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்துவருகின்றனர்.
Tags:    

Similar News