ஆன்மிகம்
பூண்டி மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி

பூண்டி மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி

Published On 2021-02-20 03:15 GMT   |   Update On 2021-02-20 03:15 GMT
பூண்டி மாதா பேராலயத்தில் ஆன்மீக தந்தை அருளானந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது.
உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தவக்காலத்தின் முதல் வெள்ளியான நேற்று மாலை பூண்டி மாதா பேராலயத்தில் ஆன்மீக தந்தை அருளானந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தொடர்ந்து சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது. இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தைராஜ், உதவிபங்குத்தந்தை அருண்சவரிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் பூதலூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திலும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

Similar News