ஆன்மிகம்
செம்பருத்தி விளை புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
அழகிய மண்டபம் அருகே உள்ள செம்பருத்தி விளைபுனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
அழகிய மண்டபம் அருகே உள்ள செம்பருத்தி விளைபுனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று முடிவடைந்தது.
நேற்று முன்தினம் நடந்த முதல் திருவிருந்து திருப்பலிக்கு பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இதில் 18 சிறுவர்களுக்கு முதல் திருவிருந்து கொடுக்கப்பட்டது.
நேற்று தேர்பவனி நடந்தது. இதையொட்டி காலை திருவிழா சிறப்பு திருப்பலிக்கு அருட்பணியாளர் அல்போன்ஸ் தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கொடி இறக்கம் நடைபெற்றது. அதன்பிறகு நடந்த நிகழ்ச்சிக்கு பங்கு தந்தைகள் ராபர்ட் ஜான் கென்னடி, அருள் ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாலை 6 மணிக்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு தேர்பவனி நடந்தது.
திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ராபர்ட் ஜான் கென்னடி, இணை பங்குத்தந்தை அருள் ஜெகதீஷ், துணைத்தலைவர் கிரகோரி, செயலாளர் சுபா பொருளாளர் ராஜேஷ் மோன், துணைச் செயலாளர் ஸ்டாலின் சேகர் மற்றும் பங்குப்பேரவை, பங்கு மக்கள் இணைந்து செய்து இருந்தனர்.
நேற்று முன்தினம் நடந்த முதல் திருவிருந்து திருப்பலிக்கு பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இதில் 18 சிறுவர்களுக்கு முதல் திருவிருந்து கொடுக்கப்பட்டது.
நேற்று தேர்பவனி நடந்தது. இதையொட்டி காலை திருவிழா சிறப்பு திருப்பலிக்கு அருட்பணியாளர் அல்போன்ஸ் தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கொடி இறக்கம் நடைபெற்றது. அதன்பிறகு நடந்த நிகழ்ச்சிக்கு பங்கு தந்தைகள் ராபர்ட் ஜான் கென்னடி, அருள் ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாலை 6 மணிக்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு தேர்பவனி நடந்தது.
திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ராபர்ட் ஜான் கென்னடி, இணை பங்குத்தந்தை அருள் ஜெகதீஷ், துணைத்தலைவர் கிரகோரி, செயலாளர் சுபா பொருளாளர் ராஜேஷ் மோன், துணைச் செயலாளர் ஸ்டாலின் சேகர் மற்றும் பங்குப்பேரவை, பங்கு மக்கள் இணைந்து செய்து இருந்தனர்.