ஆன்மிகம்
குருவிக்காடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா
அழகிய மண்டபம் அருகே உள்ள குருவிக்காடு புனித அந்தோணியார் ஆலய 5-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை)திருப்பலியும், தேர் பவனியும் நடைபெறுகிறது.
அழகிய மண்டபம் அருகே உள்ள குருவிக்காடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் இயேசு ரத்தினம் தலைமை தாங்கி கொடியை ஏற்றி வைத்தார்.
5-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு முன்னாள் குருகுல முதல்வர் மரியாள் தலைமையில் திருப்பலியும், 11 மணிக்கு தேர் பவனியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மாலை பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஒய்ஸிலின் சேவியர், பங்கு பேரவையினர், பங்கு மக்கள் இணைந்து செய்துள்ளனர்.
5-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு முன்னாள் குருகுல முதல்வர் மரியாள் தலைமையில் திருப்பலியும், 11 மணிக்கு தேர் பவனியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மாலை பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஒய்ஸிலின் சேவியர், பங்கு பேரவையினர், பங்கு மக்கள் இணைந்து செய்துள்ளனர்.