ஆன்மிகம்
புனித சவேரியார்

ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2021-02-05 05:48 GMT   |   Update On 2021-02-05 05:48 GMT
கருங்கல் அருகே ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய 181-வது பங்கு குடும்ப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கருங்கல் அருகே ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய 181-வது பங்கு குடும்ப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று மாலை 6.30 மணிக்கு கொடியேற்றப்பட்டு வருகிற 14-ந் தேதி மாலை 4.40 மணிக்கு நன்றி திருப்பலியோடு விழா நிறைவு பெறுகிறது.

கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் திருக்கொடி ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆலஞ்சி மறை வட்டார அருட்தந்தைகள், பங்கு மக்கள் கலந்து கொள்கின்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள், அருட்சகோதரர் கன்சன் பிராங்கிளின், பங்கு அருட்பணி மரிய சூசை வின்சென்ட், வட்டார முதன்மை பணியாளர் ஜேசுதாசன் ஆகியோர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News