ஆன்மிகம்
குளச்சல் தூய காணிக்கை அன்னை திருத்தல திருவிழா திருக்கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

குளச்சல் தூய காணிக்கை அன்னை திருத்தல திருவிழா தொடங்கியது

Published On 2021-01-30 04:07 GMT   |   Update On 2021-01-30 04:07 GMT
குளச்சல் தூய காணிக்கை அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 7-ந்தேதி வரை 10நாட்கள் நடக்கிறது.
குளச்சல் தூய காணிக்கை அன்னை திருத்தல திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 7-ந்தேதி வரை 10நாட்கள் நடக்கிறது.

இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு முன்னோர் திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற கோட்டார் பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் குளச்சல் மறை வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் சேல்ஸ், பங்குத்தந்தை மரிய செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவிழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள், திருப்பலி ஆகியவை நடக்கிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து, இரவு 9 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா நடக்கிறது. வருகிற 2-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நற்கருணை ஆராதனை, மாலை 6 மணிக்கு காணிக்கை அன்னை திருச்சப்பர மெழுகுவர்த்தி பவனி நடைபெறுகிறது. 5-ந்தேதி காலை 7 மணிக்கு நோயாளிகளுக்கான குணமளிக்கும் சிறப்பு திருப்பலியும், 6-ந்தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு மாலை ஆராதனையும் நடக்கிறது.

7-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா முதல் திருப்பலி, 8 மணிக்கு கோட்டார் பிஷப் நசரேன் சூசை தலைமையில் பெருவிழா திருப்பலி, 10 மணிக்கு இலவச மருத்துவ முகாம் ஆகியவற்றுடன் விழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News