ஆன்மிகம்
சுரண்டையில் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

சுரண்டையில் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

Published On 2021-01-27 03:49 GMT   |   Update On 2021-01-27 03:49 GMT
சுரண்டை புனித அந்தோணியார் தேர்பவனி அனைத்து தெருக்களிலும் பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
சுரண்டை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை ஜெபமாலை, திருவிழா திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. மறை மாவட்டத்தை சேர்ந்த பங்குதந்தைகள் தினமும் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் மாலை நடந்தது. தேரில் புனித அந்தோணியார் எழுந்தருளி அனைத்து தெருக்களிலும் பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் தேர் பவனியை தொடங்கி வைத்தார். மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை லாரன்ஸ் தலைமையில் அருட்சகோதரிகள், ஊர் பொறுப்பாளர்கள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News