உவரி அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று இரவு கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்
திருவிழா தொடர்ந்து வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலை திருப்பலியும், மாலை மறையுரை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 30-ந் தேதி திருவிழா மாலை ஆராதனையையும், மறுநாள் காலை திருவிழா கூட்டு திருப்பலியையும் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை டொமினிக் அருள்வளன், நிதி குழு, மற்றும் சபையினர் செய்துள்ளனர்.