ஆன்மிகம்
மாரம்பாடியில் புனித பெரிய அந்தோணியார் ஆண்டு பெருவிழா
வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி புனித பெரிய அந்தோணியார் தேவாலயத்தில் 5 மின்ரத பவனி விசுவாச வளாகத்தில் இருந்து புறப்பட்டு தேவாலயத்தை சுற்றி வந்தது.
வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 16-ந் தேதி புனிதரின் ஆடம்பர கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17-ந் தேதி திருவிருந்து திருப்பலி நடந்தது. நேற்று அதிகாலையில் 5 மின்ரத பவனி விசுவாச வளாகத்தில் இருந்து புறப்பட்டு தேவாலயத்தை சுற்றி வந்தது.
மாலையில் புனித பெரிய அந்தோணியார், அன்னை வேளாங்கண்ணி, புனித ராயப்பர், சிறிய அந்தோணியார், புனித வனதூதர் ஆகிய புனிதர்களின் சிலைகளுடன் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர் பவனி தேவாலயத்தை சுற்றி வந்தது. இத்திருவிழாவில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, சென்னை மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை மறை வட்ட முதன்மை குரு, பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை மற்றும் இறைமக்கள் செய்து இருந்தனர்.