ஆன்மிகம்
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

Published On 2021-01-16 05:00 GMT   |   Update On 2021-01-16 05:00 GMT
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வில்லுக்குறி, மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை ஆகியவை நடந்தது. தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்டம் ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி திருவிழா கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார். நிகழ்ச்சியில், பங்குத்தந்தை ஜெயக்குமார், இணைப்பங்குத்தந்தை ஷிஜின், அருட்பணியாளர் எக்கர்மன்ஸ் மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டனர். விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

விழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குதல், மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.

புனித செபஸ்தியார் நினைவு தினமான 20-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, தொடர்ந்து புனிதரின் அருளிக்கம் முத்தம் செய்தல், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலியும் நடக்கிறது.

23-ந் ேததி காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி மற்றும் வாணவேடிக்கையும் நடைபெறும்.

இறுதி நாளான 24-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி, காலை 8.30 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி, மதியம் 1 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறுகிறது
Tags:    

Similar News