ஆன்மிகம்
பொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தை ஏசு ஆலய திருவிழா தொடங்கியது
பொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தைஏசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பலி நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியில் உள்ள அற்புத குழந்தைஏசு ஆலய திருவிழா மற்றும் இறை சமூக பெருவிழா நேற்று தொடங்கியது. விழா 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. நேற்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள் ஆகியவை நடந்தது.
தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. அருட்பணியாளர் ஜோன்ஸ் ஜீனியர் பங்கேற்று கொடியை ஏற்றி வைத்தார். ஆயர் இல்ல முப்பணிக்குழு இயக்குனர் மரிய வின்சென்ட் எட்வின் அருளுரையாற்றினார். பின்னர் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கு மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள், ஆகியவை நடக்கிறது. 16-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து கூட்டு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான 17-ந் தேதி காலை 7 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி, மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை தேவதாஸ், பங்கு பேரவை துணைத்தலைவர் பனிபிச்சை, செயலாளர் ஆண்டனி பென்சிக், பொருளாளர் ராஜன், துணை செயலாளர் அமலா மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள் செய்துள்ளனர்.