ஆன்மிகம்
மயிலாடுதுறையில் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா தொடங்கியது

மயிலாடுதுறையில் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா தொடங்கியது

Published On 2021-01-08 05:23 GMT   |   Update On 2021-01-08 05:23 GMT
மயிலாடுதுறை கூறைநாட்டில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மயிலாடுதுறை கூறைநாட்டில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய வளாகத்தில் பங்குத்தந்தை ஜெ.ஜெ.பிரிட்டோ அடிகளார் தலைமையில் கொடி பவனி நடைபெற்றது. மயிலாடுதுறை மறைவட்ட முதன்மை குரு பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் அடிகளார் புனித அந்தோணியார் உருவக்கொடியை புனிதம் செய்து ஏற்றினார். 

வாணவேடிக்கை முழங்க, இன்னிசை இசைக்க, ஆலய வளாகத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் உலக அமைதிக்காகவும், கொரோனா தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திட சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 

விழாவின் தொடக்க நாள் வழிபாட்டு நிகழ்வுகளை புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி மற்றும் புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்தவர்கள் பங்கு மக்களோடு இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். கொடியேற்று விழா மற்றும் திருப்பலி நிகழ்வுகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கிய ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. 

தினசரி மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. வருகிற 16- ந் தேதி (சனிக்கிழமை) இரவு, திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனை தொடர்ந்து தேர் பவனியும் நடைபெற உள்ளது. 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News