ஆன்மிகம்
பாளையங்கோட்டையில் சவேரியார் பேராலய சப்பர பவனி
பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலய திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சப்பர பவனி நேற்று இரவு நடைபெற்றது.
பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சப்பர பவனி நேற்று இரவு நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலை பங்குத்தந்தை ஆண்டோ தலைமையில் திருப்பலி நடந்தது. மாலையில் சிறப்பு திருப்பலி நடத்தினர். இதைத்தொடர்ந்து சவேரியார் திருஉருவத்துடன் கூடிய சப்பர பவனி நடைபெற்றது. தெற்கு பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை ராஜேஷ், உதவி பங்குதந்தைகள் மிக்கேல் பிரகாசம், லூர்து ராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.