ஆன்மிகம்
ஆரோக்கிய மாதா

பெங்களூரு ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழா 29-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-08-24 03:06 GMT   |   Update On 2019-08-24 03:06 GMT
பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பிரசித்திபெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பெங்களூரு சிவாஜிநகரில் பிரசித்திபெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் பேராலயத்தின் 138-வது ஆண்டு திருவிழா வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அதாவது மாலை 5.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சியும், நற்கருணை ஆசீர், மாலை 6.30 மணிக்கு மறையுரைகள், நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும் நடக்கிறது.

31-ந்தேதி நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. காலை 9 மணிக்கு கன்னடத்திலும், காலை 10 மணிக்கு ஆங்கிலத்திலும், காலை 11 மணிக்கு தமிழிலும் திருப்பலி நடக்கிறது. அன்று இரவு 10 மணி முதல் மறுநாள் (1-ந்தேதி) அதிகாலை 4.30 மணி வரை இரவு ஆராதனையும் நடக்கிறது.

1-ந்தேதி காலை 9 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும், காலை 10 மணிக்கு கன்னடத்தில் கூட்டுத்திருமணமும், காலை 11.30 மணிக்கு தமிழில் கூட்டுத்திருமணமும், திருமண பொன்விழா தம்பதியருக்கான நன்றி திருப்பலி பகல் 1.30 மணிக்கு கன்னடத்திலும், பகல் 2.40 மணிக்கு தமிழிலும் நடக்கிறது.

6-ந்தேதி சபையினர் மற்றும் இளைஞர் அணியினருக்கான சிறப்பு திருப்பலி காலை 9 மணிக்கு கன்னடத்திலும், காலை 11 மணிக்கு தமிழிலும் நடக்கிறது. 8-ந்தேதி தூய ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழாவையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை தொடர்ந்து திருப்பலிகள் நடக்கிறது. ரசல் மார்க்கெட் சதுக்கத்தில் காலை 9.30 மணிக்கு பெருவிழாவின் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. இதில் பெங்களூரு உயர்மறை மாவட்ட பேராயர் பீட்டர் மச்சாதோ கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு தூய ஆரோக்கிய அன்னையின் அலங்கார தேர் பவனியும், இரவு 8.30 மணிக்கு நற்கருணை ஆசீர் மற்றும் அன்னையின் கொடியிறக்க நிகழ்ச்சியும் நடக்கிறது.

மேலும் 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரையும், காலை 9 மணி முதல் 12 மணி வரையும், பகல் 3.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் தமிழ், கன்னடம், ஆங்கிலம், கொங்கணி, மலையாளம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பேராலய நிர்வாகத்தினர் மற்றும் சபை மக்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News